ஆத்தூரில் மேலாளரை கட்டிப்போட்டுவிட்டு ரூ.3.30 லட்சம் கொள்ளை

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மரவள்ளி கிழங்கு புரோக்கர் அலுவலகத்தில், மேனேஜரை கட்டிப்போட்டுவிட்டு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழங்கு புரோக்கரான பிரகாஷ், ஆத்தூர் பஜார் பகுதியில் அலுவலகம் வைத்துள்ளார். விவசாயிகளிடம் மரவள்ளி கிழங்குகளை வாங்கி, அதனை ஜவ்வரிசி ஆலைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.

இன்று காலை பிரகாஷின் அலுவலகத்துக்கு வந்த சில மர்ம நபர்கள், அலுவலக மேலாளர் ஷேக்தாவூத்திடம், கத்தியைக்காட்டி மிரட்டி, அவரை நாற்காலியில் கட்டிப்போட்டு விட்டு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது. இது குறித்து, ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version