விழுப்புரத்தில் ரூ. 2.53 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சி மற்றும் கால்நடை ஆகிய 3 துறைகளின் மூலம் 2 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டிங்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட டி.கேணிப்பட்டு கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் தானிய சேமிப்பு கிடங்கிற்கான புதிய கட்டிடத்தையும், மயிலத்தில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தையும், பாதிராபுலியூரில் நபார்டு திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தானிய கிடங்கினையும் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் திறந்து வைத்தார்.

Exit mobile version