பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு அமைச்சர் சிவி சண்முகம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திண்டிவனத்தில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு ஆதரவாக, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திண்டிவனத்தில் உள்ள 33 வார்டுகளிலும் திறந்த வேனில் நின்றபடி மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரித்த அமைச்சர் சிவி சண்முகத்திற்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும்,மாலை அணிவித்தும் வரவேற்றனர். பிரசாரக் கூட்டத்தில் அவருடன் தேமுதிக, பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version