தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அமைச்சர் சிவி சண்முகம்

விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், பாமகவைச் சேர்ந்தவருமான வடிவேல் ராவணனை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அருகே வாகனம் மூலம் பிரசாரத்தை தொடங்கிய அவர் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இந்த பிரசார ஊர்வலத்தில் அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திரெளபதி அம்மன் கோயிலில் அமைச்சர் சிவி சண்முகமும், வடிவேல் ராவணனும் வழிபாடு நடத்தினர்.

Exit mobile version