நத்தம் அருகே ரூ. 2.42 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்

நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பிடிப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கன்னியாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் நோக்கிச் சென்ற ஆம்னி வேனில் 2 கோடியோ 42 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை கைபற்றிய அதிகாரிகள், நத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version