விசிக பிரமுகர் காரிலிருந்து ரூ2.10கோடி பறிமுதல்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் காரிலிருந்து சுமார் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் பேரளி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் தங்கத் துரையின் காரை சோதனை செய்தனர்.

காரின் கதவு உட்பட பல்வேறு பகுதிகளில் 2 கோடியே 10 லட்ச ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version