11 விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.15 லட்சம் கடன் பெற்று மோசடி

கடலூர் அருகே,11 விவசாயிகள் பெயரில் வங்கியில் 15 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சர்க்கரை ஆலை உரிமையாளர் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தை சேர்ந்த 11 விவசாயிகள் பெயரில் வங்கியில் 15 லட்சம் ரூபாயை இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடனை திரும்ப செலுத்தக்கூறி வங்கியிலிருந்து விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால், ஆலையின் உரிமையாளர் தியாகராஜன் மற்றும் வங்கி மேலாளர் மீது விவசாயிகள் திட்டக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், இதுபோன்ற வேறு சில புகார்களின் பேரில், ஏற்கனவே ஆலை உரிமையாளர் மீது கடலூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதால் இந்த புகார் மனுக்களை கடலூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version