அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை

தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற்று, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை பெற்றுக்கொண்டார்.

தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். அவருக்கு அதிமுக சார்பில் ஊக்கத் தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், தடகள வீராங்கனை கோமதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இருவரும், கோமதிக்கு மலர்கொத்து கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்போது கோமதிக்கு அதிமுக சார்பில் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Exit mobile version