இந்தியா முழுவதிலும் ரூ.1,253 கோடி பறிமுதல்

இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆயிரத்து 253 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், வியாழக்கிழமை வரை இந்தியா முழுவதும் அறநூற்று எழுபத்து மூன்று கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி இது இரு மடங்காக அதிகரித்து, ஆயிரத்து 253 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் நூற்று ஐம்பத்து மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version