ரூ.10 சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண்கள்

ஐதராபாத் அருகே பத்து ரூபாய் சேலைக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த சேலையை கிழித்துக்கொண்டு, கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சித்திப்பேட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் ஜவுளிக் கடை, விளம்பர நோக்கத்துடன் ஒரு சேலை பத்து ரூபாய்க்கு தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் முந்தியடித்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தனர்.

கடை முழுவதும் பெண்கள் கூட்டம் நிரம்பியதால், சமாளிக்க முடியாத கடை நிர்வாகம் கடையின் ஷட்டரை இழுத்து மூடியது. வெளியேற முடியாமல் தவித்த பெண்கள் ஷட்டரை உந்தி, தள்ளிக்கொண்டு வெளியேற முயற்சித்தனர். சற்று நேரத்தில் ஷட்டர் உடைந்து உள்ளே இருந்த பெண்கள் கடையின் வெளியே விழுந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் ஏராளமான பெண்களின் சேலைகள் கிழிந்தது. கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட திருடர்கள் பெண்கள் அணிந்திருந்த நகை மற்றும் பணப்பை உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version