பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள நாசவம்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்ததில், 10 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றது தெரியவந்ததையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு அவற்றை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.

Exit mobile version