லாரி ஓட்டுநரை தாக்கி ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கடத்தல்!!

ஆந்திர மாநில எல்லையில் லாரி ஓட்டுநரை தாக்கி 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை மற்றொரு லாரியில் கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவன கிடங்கிலிருந்து, செல்போன்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆந்திராவிற்கு புறப்பட்டது. அப்போது, மர்ம நபர்கள் சிலர் ஓட்டுநரை தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், லாரியை சோதனையிட்ட போது சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. செல்போன்களை மற்றொரு லாரியில் மர்ம நபர்கள் கடத்தியிருக்கலாம் என கருதிய ஆந்திர மாநில காவல்துறையினர், தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்கச்சாவடிகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version