திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.61 கோடி காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். ஜூலை மாதக் காணிக்கையாக ஒரு கோடியே 61 லட்ச ரூபாயும், ஆயிரத்து 375 கிராம் தங்கமும், 20 ஆயிரம் கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன. இதுதவிர 536 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version