சாலையில் வீசப்பட்ட ரூ. 1.56 கோடி: கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சென்னையில் போலீசார் வாகன சோதனையின் போது சாலையில் வீசப்பட்ட ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். இதையடுத்து அந்த நபர்கள், தாங்கள் வைத்திருந்த 3 பைகளை வீசிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றனர். சாலையில் கிடந்த பைகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்தப் பணம் சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் கொள்ளை அடித்த நபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version