பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1.5 கோடி கையாடல்

செஞ்சி அருகே, போலி நகைகளை வைத்து சுமார் ஒன்றரை கோடி கையாடல் செய்த வழக்கில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திருவம்பட்டுவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் நகை மதிப்பீட்டாளராக ஜெகநாதன் இருந்து வந்தார். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை வைத்து சுமார் ஒன்றரை கோடி ரூபாயை அவர் கையாடல் செய்துள்ளார். இது தொடர்பாக வங்கியின் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெகநாதன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சத்யா, முனிஸ்வரமூர்த்தி, வேணுகோபால், சுரேஷ்பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version