இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறுவது உறுதி-ஆர்.பி.உதயகுமார்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றி பெற உள்ளதாக குறிப்பிட்டார். மத்திய அமைச்சரவையில் திமுக கூட்டணி அங்கம் வகித்தபோது ஜாதி வெறி, மதவெறி எங்கு சென்றது என திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பினார். மக்களின் மறதியை எதிர்கட்சிகளின் சொத்தாக நினைப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

Exit mobile version