வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு- 4பேர் கைது

சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் பெண் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி கோழி பாண்டியன், இவர் கடந்த 20ம் தேதி அண்ணாமலை நகரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற போது வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2014 ல் நடைபெற்ற சகோதரர் கொலைக்கு பலி தீர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மணி, ஜெயசீலன், ராஜாம் மணி மற்றும் மஞ்சுளா என்ற பெண் உட்பட 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சரத்குமார் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version