திருச்செங்கோடு அருகே பட்டபகலில் ரவுடி வெட்டி கொலை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பட்டபகலில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி தனபால். இவர் கடந்த 3ம் தேதி ஆனங்கூர் சாலையிலுள்ள பன்றி இறைச்சி கடையின் பின் பக்கத்தில் 2 பேருடன் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கு திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட கரிக்கடைக்காரர் பின்னால் சென்று பார்த்த போது தனபால் வெட்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், மோடாமங்கலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலர்களை கண்டவுடன் திரும்பி செல்ல முயன்றனர்.  அவர்களை துரத்தி பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ரவுடி தனபால் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்காக பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version