அலங்காநல்லலூரில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை

மதுரை அலங்காநல்லலூரில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிக் கொலை செய்த இளைஞர், வெட்டிய தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முத்துவேல் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்றிரவு மது அருந்திய போது, முத்துவேல் மற்றும் அவரது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நாகராஜன் என்பவர் முத்துவேலின் தலையில் வெட்டி உள்ளார். இதில், முத்துவேலின் தலை துண்டாகி உள்ளது. கொலை செய்த நாகராஜன், முத்துவேலின் தலையுடன் அலங்காநல்லூர் காவல்நிலையதில் சரண் அடைந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாகராஜனை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version