ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டி கொண்டாடிய ரவுடி கும்பல் கைது

சேலம் அருகே ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டி கொண்டாடிய ரவுடி கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீசஸ் என்கிற ஜேசுராஜ். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 2016ம் ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழும் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தவர். இந்நிலையில், தனது பிறந்தநாளை, நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பயங்கர ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டியதோடு, சத்தமாக கூச்சலிட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜேசுராஜ், அவரது சகோதரர் மோசஸ், நண்பர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version