திருநெல்வேலியில் ஜவுளிக்கடை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது

திருநெல்வேலியில் உள்ள ஜவுளிக்கடைக்குள் புகுந்து கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலியில் சில தினங்களுக்கு முன் ஜவுளிக்கடைக்குள் புகுந்து பொருட்களை எடுத்து சென்ற ரவுடியை கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மீண்டும் கடைக்குள் புகுந்து முன்பக்க கண்ணாடியை ஆயுதங்களால் தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை கைது செய்தனர். பின்னர், ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் ரவுடியை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

Exit mobile version