முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா

தொடக்க வீரராக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தி உள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர், நிதானமாக விளையாடி அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் அதிகரி

மயங்க் அகர்வாலும் தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி என்பவர் விளையாடி வருகிறார்.

Exit mobile version