நாளை பரோலில் விடுவிக்கப்படுகிறார் ராபர்ட் பயஸ்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் நாளை பரோலில் விடுவிக்கப்படுகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், ராபர்ட் பயஸ் தனது மகன் தமிழ்க்கோவின் திருமண ஏற்பாட்டிற்காக ஒரு மாத காலம் பரோல் கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ராபர்ட் பயசுக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறைத் துறையின் சட்ட நடைமுறைகள் முடிந்த நிலையில், நாளை காலை புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயஸ் பரோலில் விடுக்கப்படவுள்ளார்.

Exit mobile version