சென்னையில் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளர்களை குறிவைத்து கொள்ளை

அத்திப்பட்டு பகுதியில் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில், மதுரவாயல் வானகரம் வழியாக செல்லும் சாலையில் சுடுகாடு பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். முருகன், மகேஷ் என்ற அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version