கதவணை மின் உற்பத்தி பாலத்தின் இணைப்புச்சாலை சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல்லில் கதவணை மின் உற்பத்தி பாலத்தின் இணைப்புச்சாலை சரிந்து விழுந்ததால் நாமக்கல், ஈரோடு ஆகிய இரு மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி மற்றும் ஈரோடு மாவட்டம் பாசூரை இணைக்கும் வகையில் கதவணை மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 13 ஆம் தேதி இந்த சாலை மண் பிடிமானமில்லாமல் திடீரென சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து சாலை சீரமைக்கப்பட்டு மேலும் பணிகள் நடந்து வரும் நிலையில் வாகன போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திடீரென இணைப்பு சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாலம் சரிந்தது. இதனால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Exit mobile version