விபத்துகளை தடுக்க சாலைகளில் ஒளிரும் விளக்குகள் தேவை: சத்தியமங்கலம் மக்கள்

விபத்துகளை தடுக்க சாலை சந்திப்புகளில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் ஒளிரும் விளக்குகள் அமைக்க சத்தியமங்கலம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அத்தாணி சாலையில் அடிக்கடி விபத்து நிகழும் இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இந்த விளக்குகள் பயன்பாட்டில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல உதவுகிறது. இந்த ஒளிரும் விளக்குகள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் உள்ள முக்கிய சலைகளின் சந்திப்புகளில் இது போன்ற ஒளிரும் விளக்குகளை விரிவு படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version