விருதுநகரில் உள்ள கிராமங்களில் சாலை, பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சாலை வசதி மற்றும் பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நரிக்குடி ஒன்றியம். இதைச் சுற்றியுள்ள கமலி புளியங்குளம், வேம்பங்குடி, முடுக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்வதுடன், பேருந்து வசதியும் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version