சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு வேறொரு இடத்தில் நடப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டன.

வடமதுரையிலிருந்து, வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் இரு புறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இவற்றில் வேருடன் பிடுங்கி நட்டால் மறுபடியும் முளைக்கக்கூடிய மரங்களை கண்டறிந்து, அவற்றை மீண்டும் நடும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இயந்திரங்கள் மூலம் வேருடன் பிடுங்கப்பட்ட மரங்கள் மற்றொரு இடத்தில் நடப்பட்டன.

Exit mobile version