நதிகள் இணைக்கும் திட்டம் – ஜி.கே. வாசன் வரவேற்பு

கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பை நிறைவேற்றுவதாக கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைக்கும் திட்டமே முதல் பணி என தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பு ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்றும், தமிழகத்திற்கு பெரிதும் பயன் தரும் கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைப்பை நிறைவேற்றுவது தான் முதல் வேலை என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். நதிகள் இணைப்பின் மூலம் தமிழக மக்களுக்கு தேவையான தண்ணீர் பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்திற்கு இத்திட்டம் மிகவும் அவசியம் என்றும் ஜி.கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version