ஜே.கே. ரித்தீஷ் மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளரும் ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே. ரித்தீஷ் மறைவையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ரித்தீஷ் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்த செய்தியை கேட்டு ஆற்றொணா துயரம் அடைந்ததாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

அதிமுக மீது மிகுந்த விசுவாசத்துடன் பணியாற்றிவந்த ஜே.கே.ரித்தீஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் அவர்கள் தெரிவித்துக் கொண்டுள்ளனர். ரித்திஷ் ஆத்மா அமைதி பெற பிரார்த்திப்பதாக முதல்வர், துணை முதல்வர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version