ரிஷிவந்தியம் எம்எல்ஏ வருங்கால முதல்வர் என முழக்கமிட்டதால் சலசலப்பு

கள்ளக்குறிச்சியில் ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்த கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் அவரை வருங்கால முதல்வரே என முழக்கமிட்டதால் அக்கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்தம் கார்த்திகேயனுக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக திமுக தலைமை நியமனம் செய்தது. கள்ளக்குறிச்சியில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், வசந்தம் கார்த்திகேயனை வருங்கால முதல்வர் என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இந்த சம்பவம் அக்கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version