உலககோப்பை தொடரில் பங்கேற்க ரிஷப் பந்த் இங்கிலாந்து பயணம்

உலகக்கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில், ரிஷப் பந்த் இங்கிலாந்து வர பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. தேவைப்படும் பட்சத்தில் அவரை களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஷிகர் தவானுக்கு கையில் காயமேற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 வார காலங்களுக்கு விளையாடாமல் ஒய்வெடுக்குமாறு பரிந்துரைத்தனர். இதையடுத்து உலகக்கோப்பை தொடரிலிருந்து அவர் விலகினார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் 15 பேர் குழுவில் இடம்பெற்றுள்ள இடதுகை ஆட்டக்காரர் ரிஷப் பந்த், இங்கிலாந்து வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. தேவைப்படும் பட்சத்தில் அவரை உலகக் கோப்பை போட்டிகளில் களமிறக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ரிஷப் பந்த் இன்று மாலை இங்கிலாந்து சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version