அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.1,000 விநியோகம்!

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், அரிசி அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி துவங்குகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், வீடுவீடாக சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி இன்று முதல் துவங்குகிறது.

Exit mobile version