சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக கலைவாணர் அரங்கில் மீண்டும் ஆய்வு!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலைவாணர் அரங்கில் மீண்டும் ஆய்வு நடத்தினர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்றது. 6 மாதத்துக்குள் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது மரபு. அதன்படி, செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தற்போதைய சட்டப்பேரவையில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழல் உள்ளது. இதனால் கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சட்டபேரவை தலைவர் தனபால், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர்.

Exit mobile version