வருவாய் தீர்வாய சிறப்பு முகாம்:உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட மனுக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற வருவாய் தீர்வாய சிறப்பு முகாமில், முறையான மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான வருவாய் தீர்வாய சிறப்பு முகாம் நடைபெற்றது. பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்று உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. 76 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 10 மனுக்கள் மீது வருவாய் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து, அதற்கான சான்றிதழை சார் ஆட்சியர் சாதனை குறள் வழங்கினார்.

Exit mobile version