மூன்று கொத்தடிமைகளை மீட்ட வருவாய் துறையினர்

அரக்கோணம் அருகே பத்தாண்டுகளாக கொத்தடிமையாக பணிபுரிந்து வந்த குடும்பத்தை மீட்டு வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தில் ஜெயலலிதா என்பவரது வீடு மற்றும் தோட்டத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த சண்முகம், அவரது மனைவி அங்கம்மாள், அவர்களது மகன் பாளையம் ஆகியோரை உதவி ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்டனர். 60 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதற்காக கடந்த 10 ஆண்டு காலமாக கொத்தடிமைகளாக வேலை பார்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சண்முகம் குடும்பத்தினரை மீட்ட அதிகாரிகள், அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கி, சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version