ரோகித் ஷர்மாவிற்கு ஓய்வு? – டோனிக்கு மீண்டும் வாய்ப்பு?

மேற்கு இந்திய தீவுக்கு எதிராக பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கு இந்திய தீவு அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியை, எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு இன்று அறிவிக்கிறது. தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வரும் துணை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு மேற்கு இந்திய தீவு தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல், ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக மற்றொரு வீரரை தேர்வுக் குழு தேர்வு செய்யும், என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பயிற்சியில் களமிறங்கியுள்ள அனுவப வீரரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான டோனி இந்த தொடரில் பங்கேற்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆயினும் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

Exit mobile version