கனிமொழி வாக்கு சேகரிக்க சென்றபோது பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி பிரசாரம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி வாக்கு சேகரிக்க சென்றார்.அப்போது அப்பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி அவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், எனவே, திமுக பிரசாரம் செய்ய எண்ண தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

Exit mobile version