புதுச்சேரி துணை நிலை ஆளுநர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு : அதிமுகவினர் வெளிநடப்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததை கண்டித்து எதிர்கட்சி தலைவர் அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் துணைநிலை ஆளுநரின் முரண்பாடான செயலால் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.

Exit mobile version