திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிய நபரை, அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் சிகிச்சை பெற்றுவந்த பழனி அண்ணாநகரை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், சிகிச்சை முடிந்து மீண்டும் பழனிக்கு திரும்பினார். இதுகுறித்து தகவலறிந்து அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட நபரை அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மருத்துவர்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த நபரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவருக்கு எதிர்ப்பு
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: #coronaindiacoronacoronavirusErodenewsj
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023