துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த எதிர்ப்பு

திமுக பொருளாளர் துறைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள காந்தி நகர் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தின் வீடு உள்ளது. இந்நிலையில் வருமான வரித் துறை துணை ஆணையர் தீபன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் குழுவினர் துரைமுருகன், கதிர் ஆனந்த் தங்கியுள்ள வீட்டில் சோதனை நடத்துவதற்காக நேற்று இரவு சென்றனர். அங்கிருந்த திமுகவினர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். 3மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version