குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடுகளை கொல்லும் சிறுத்தை

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு கிராமத்தில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் வனப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பன்றி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த வகையில் அதிகாலையில் குட்டியுடன் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று ஈஸ்வரன் என்பவரது வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 3 ஆடுகளை கடித்துக் கொன்றதுடன், இரண்டு ஆடுகளை தூக்கிச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க மின்வேலி, அகழி உள்ளிட்டவற்றை அமைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version