தீபாவளிக்கு வெளியூர் செல்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்கு அரசுப் பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. தீபாவளி பண்டிகைக்காக தென்மாவட்டங்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், www.tnstc.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் இடங்கள் குறித்தும் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version