சென்னை மாநகராட்சி தேர்தல் : 200 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு

சென்னை மாநகராட்சியில் அட்டவணை வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டை அறிவித்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதில், சென்னை மாநகராட்சி மேயர் பதவி அட்டவணை பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில்,

தற்போது சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அட்டவணை பிரிவு மகளிருக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு மகளிர்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 16 வார்டுகள் அட்டவணை பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version