கர்நாடகாவில் கடலில் தத்தளித்த மாலுமிகள் மீட்பு

மங்களூர் துறைமுகத்தில் மூழ்கிய கப்பலில் இருந்து தப்பி உயிர்காக்கும் படகில் தத்தளித்த மாலுமிகள் 13 பேரைக் கடலோரக் காவல்படையினர் மீட்டனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் துறைமுகத்தில் திரிவேதி பிரேம் என்கிற கப்பல் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் இந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்து உள்ளே கடல்நீர் புகுந்தது.

இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் உயிர்காக்கும் படகில் ஏறிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற கடலோரக் காவல்படையினர் 13 மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்டனர். மூழ்கிய கப்பலில் இருந்த மேலும் 7 மாலுமிகளைத் தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version