கொத்தடிமையாக வேலை பார்த்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு

நாமக்கல் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை பார்த்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிபட்டியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் செங்கல்சூளையின் உரிமையாளர் இவர்களின் பணிச்சுமையை அதிகமாக்கி, கொத்தடிமை போல் நடத்துவதாவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் நாமக்கல் மாவட்ட சார் ஆட்சியர் தலைமையிலான குழு செங்கல் சூலையில் ஆய்வு நடத்தி, 6 பேரை மீட்டனர். இது குறித்து மீட்கபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version