துணை நடிகை சந்தியா கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

துணை நடிகை சந்தியா கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் துணை நடிகை சந்தியாவின் உடல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சந்தியாவை கொலை செய்ததாக அவரது கணவர் பாலகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவரது உடல்பகுதியில் இடுப்புக்கு மேலே உள்ள பாகத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சந்தியா கொலை தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version