போக்குவரத்து வசதி செய்து தருமாறு குறுத்தமண்குண்டு மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

இராமநாதபுரம் மாவட்டம், குறுத்தமண்குண்டு மீனவ கிராமத்து மக்கள் தங்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரியபட்டினம் அருகே உள்ள குறுத்தமண்குண்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில், கிராமத்தை சுற்றி ஆற்று நீர் சூழ்ந்துள்ளதால், மாணவர்களும், பெரியவர்களும் பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே போக்குவரத்து வசதி மற்றும் பாலம் அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Exit mobile version