திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்ததால், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் முழுமையடையாததால் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்ததது.

Exit mobile version