புவனகிரி வட்டாட்சியர் அலுவலத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

புவனகிரியில் புதிய தாலுக்கா அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி புதிய தாலுக்காவாக, தமிழக அரசு சார்பில் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, புவனகிரி தாலுகா புதியதாக உதயமாகி, தனியார் கட்டிடம் ஒன்றில் சிலமாதங்கள் இயங்கி வந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு இனங்க தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், அலுவலகத்தின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், வேற்று நபர்கள் இரவு நேரங்களில் தாலுகா அலுவக பகுதிக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்காகவும், பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்க சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version